For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி மீது ஜெ.வின் சாடல் தொடர்கிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் உள்ள 12,600க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு வழங்கி வந்த நிதியுதவியை கருணாநிதிஅரசு கடந்த ஒரு வருடமாக வழங்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த கிராமப் பஞ்சாயத்துக்கள் தற்போதுபோதுமான நிதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றன. தங்கள் கிராமப் பஞ்சாயத்துகளுக்குத் தேவையானஅடிப்படைப் பணிகளைக் கூட செய்ய முடியாமல் அவதிப் படுகின்றனர்.

பஞ்சாயத்துகளுக்கு நிதி கொடுக்க முடியாத அளவிற்கு அரசு கஜானாவை வைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

சில கிராமப் பஞ்சாயத்துக்களின் நிர்வாகம் அதிமுகவைச் சேர்ந்தவர்களிடம் உள்ளதால், வேண்டுமென்றேஅவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது அரசு.

வருகிற சட்டசபைத் தேர்தலில் மக்கள் இவற்றிற்கெல்லாம் பதில் அளிப்பார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X