வீரப்பனுக்கு உதவியதாக 11 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
வீரப்பனுக்கு உதவியதாக 11 பேரை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
பர்கூர் காட்டில் வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேரை போலீசார்கைது செய்தனர். வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் தேடிஅதிரடிப்படையினர் மற்றும் மத்திய எல்லைப் பாதுகாப்பு படையினரும் தீவிர தடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வீரப்பன் எங்கு சென்றான் என்பது குறித்து உளவுத் துறை போலீசாருக்குகுழப்பமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், வீரப்பனுக்குத் தகவல் கூறுவோர்,உணவுக்கு ஏற்பாடு செய்வோர் என அவனுக்கு உதவியதாக 11 பேரை அதிரடிப்போலீசார் கைது செய்தனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவர்களைக்கைது செய்ததன் மூலம் வீரப்பனுக்குக் கிடைத்து வந்த உதவிகள் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது என உளவுப் பிரிவினர் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications