For Daily Alerts
Just In
எப்போது பொங்கல் வைக்கலாம்?
பொங்கல் திருநாள் தை மாதம் முதல் தேதி (14.01.2001) கொண்டாடப்படுகிறது.
தை மாதம் பிறக்கும் நேரத்தில் பொங்கல் பானை வைக்கப்படுவது வழக்கமாகும்.
மகர சங்கராந்தி தேவதை தெற்கு திசை நோக்கிய முகத்துடன் கிழக்கு திசையில் பிரயாணம் செய்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூர நட்சத்திரத்தில்,மகர லக்னத்தில், கன்னி ராசியில் பிரவேசிக்கிறார்.
தை மாதம் அதிகாலையிலேயே பிறந்து விடுவதால், பொங்கல் பானை அதிகாலை முதல் எப்போது வேண்டுமானாலும் வைக்கலாம். (ராகு காலம்எம கண்டம் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் மாலை 4.30மணி முதல் மாலை 6.00 மணி வரை. எமகண்டம் நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணிவரை.
பொங்கலை நண்பகல் 12.00 மணிக்கு முன் நிவேதனம் செய்வது சாப்பிடுவது உகந்தது.
Comments
Story first published: Saturday, January 13, 2001, 5:30 [IST]