வார்னேக்கு "வார்னிங்
மெல்போர்ன்:
கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்கள் மீது பந்தை எறிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்வீரர் ஷேன் வார்னேயை போலீசார் எச்சரித்தனர்.
ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. இவர் அடிக்கடிசர்ச்சைகளில் ஈடுபடுவது வழக்கம். நீண்ட கால இடைவேளைக்குப் பின் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான போட்டியில் இவர் மீண்டும் இடம் பெற்றார்.
வியாழக்கிழமை நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது போட்டியைப்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களில் சிலர் மைதானத்திற்குள் டென்னிஸ் பந்துகள்,பாட்டில்கள் போன்றவற்றை எறிந்தனர்.
இதனால் கோபமடைந்த வார்னே மைதானத்தில் வீசப்பட்ட டென்னிஸ் பந்துகளைஎடுத்து ரசிகர்கள் மீது எறிந்தார். போலீசார் ஒருவர் வார்னேயிடம் சென்று ரசிகர்கள்மீது பந்து எறிவதை நிறுத்துமாறு எச்சரித்த பின்பே வார்னே அதை நிறுத்தினார்.
போட்டியின் போது கலகத்தில் ஈடுபட்டதாக 34 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைதுசெய்தனர். இவர்கள் அனைவரும் குடிபோதையின் காரணமாக கலகத்தில் ஈடுபட்டனர்என தெரியவந்தது. அந்தப் பகுதியில் இருந்த 100-க்கும் அதிகமானவர்களைபோலீசார் மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.












Click it and Unblock the Notifications