சென்னையில் ரூ. 2 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை:
சென்னையில் சர்வதேச மதிப்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை, சென்னை நகர போலீஸார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 4 பேரைக்கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையில், கல்லூரி மாணவர்களிடம் ஒரு நபர் ஹெராயின்விற்பதாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது. இதையடுத்து போலீஸார் அந்தஇடத்திற்கு விரைந்து சென்றனர்.
அந்த இடத்தில் வெங்கடேசன் என்பவர் ஹெராயின் விற்க முயன்று கொண்டிருந்ததுதெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர் கடலூரைச்சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்.
கைது செய்யப்பட்ட மற்ற மூவரில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுதாகரன் என்பவர்,சென்னையிலுள்ள பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் என்ற இடத்தில், போதைப் பொருளைபதுக்கி வைத்திருந்தார். கெஸ்ட் ஹவுஸின் ஊழியர்களும் இந்த விஷயத்தில்அவருக்குத் துணையாக இருந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications