கும்ப மேளா .. 5 லட்சம் பேர் புனித நீராடினர்
Subscribe to Oneindia Tamil
கும்ப் நகர்:
மகா கும்பமேளாவை முன்னிட்டு, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித ஆறுகள்சங்கமிக்கும் இடத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திங்கள்கிழமை புனிதநீராடினர்.
மகர சங்கராந்தி தினத்தன்று இந்த புனித நீராடும் வைபம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமைஇரவு துவங்கிய இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 10 மணி வரை தொடர்ந்தது.
புனித நீராடுதல் நிகழ்ச்சிக்காக நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும்லட்சக்கணக்கான பக்தர்கள் கும்ப் நகருக்கு வந்தவண்ணம் இருந்தனர்.
1396 ஹெக்டேர் பரப்பளவில் விசேஷமாக தயாரிக்கப்பட்ட இந்த கும்ப் நகரில், எங்குபார்த்தாலும் பக்தர்கள், சாமியார்கள் தலைதான் காணப்படுகிது. ஆங்காங்கேபஜனைகள், கீர்த்தனைகள், மதச் சடங்குகள், ராம் லீலா, கிருஷ்ண லீலா நாடகங்கள்ஆகியவை நடந்து கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications