தேவை அதிகரிப்பு .. திணறுகிறது மின்வாரியம்
சென்னை:
தமிழக மின்சார வாரியம், அதிகரித்த தேவை காரணமாக அதிக பட்ச மின்தட்டுப்பாட்டில் திணறி வருகிறது.
தமிழக மின்வாரியம் இதுவரை இல்லாத அளவான மின்தட்டுப்பாட்டில் திணறிவருகிறது. இதுகுறித்து தமிழக மின்சார வாரியத்தின் செய்திக் குறிப்பு ஒன்றில்கூறப்படிருப்பதாவது:
டிசம்பர் மாதம் 21-ம் தேதி மின்தட்டுப்பாடு 5979 மெகாவாட் என்ற நிலையில்இருந்தது. ஆனால் ஜனவரி மாதம் 13-ம் தேதி அது 6108 மெகாவாட் என்ற அளவைஎட்டியுள்ளது. இந்த அளவுக்கு இதுவரை மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
மின்சாரத்தை உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஜனவரி 13-ம் தேதி வரை 122 மெகா யூனிட் வரை மின்சாரம்உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி வரை121 மெகா யூனிட் மின்சாரம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.