இலங்கையில் 50 புலிகள், ராணுவ வீரர்கள் சாவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

வடக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த கடும் சண்டையில் 50 இலங்கை ராணுவ வீரர்களும்,விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர்.

வடக்கு யாழ்ப்பாணத்தில் யானை இறவு பகுதிக்கு அருகில் ராணுவ வீரர்கள்நடவடிக்கையை தடுக்க விடுதலைப் புலிகளின் நடத்திய தாக்குதலில் இரு தரப்பிலும்50 வீரர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணரத்னே கூறியதாவது:

செவ்வாய்க்கிழமை நடந்த சண்டையில் 1 ராணுவ உயர் அதிகாரியம், 17 ராணுவவீரர்களும், 4 ராணுவ அதிகாரிகளும் மேலும் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச்சேர்ந்த 85 பேரும் காயமடைந்தனர்.

விடுதலை புலிகள் தரப்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த விவரம்தெரியவில்லை. ஆனாலும் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 100-க்கும்அதிகமான பேர் காயமடைந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது.

செவ்வாய்கிழமை காலை கினிஹாரா -9 என்ற தாக்குதலை ராணுவத்தினர் துவக்கினர்.இது கலாலிக்கு தெற்கு பகுதியிலும் எலுந்திமடுவல் பகுதியிலும் ராணுவத்தின்கட்டுப்பாட்டை பலப்படுத்துவதற்காக துவக்கப்பட்டது.

இந்த தாக்குதலின் போது பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் பெயர்இந்திரஜித் சர்மா எனவும், அவர் மிசாவலி கோவிலில் பூசாரியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார்

செவ்வாய்கிழமை நடந்த தாக்குதல் விடுதலைப் புலிகளை எலதுன்சாவல்பகுதியிலிருந்து யானை இறவு பகுதிக்கு துரத்துவதற்காக நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் ராணுவ வீரர்கள் முன்னேறுவதை தடுக்க கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கடந்த 3 மாதங்களில் இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளிடமிருந்து கைத்தடி,அரியாலி, சாவகச்சேரி, நாகர்கோவில் மற்றும் தேரனன்கிலப்பு உள்ளிட்ட பகுதிகளைகைப்பற்றியுள்ளனர் என கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+