"அவதூறு கூறுகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்
சென்னை:
பிரபல காந்தீயவாதி நிர்மலா தேஷ்பாண்டே ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் தன்பெயரை களங்கப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் ஜூன் மாதம் நடக்கவிருக்கும் காந்தீய அமைதி கூட்டம் குறித்தஏற்பாடுகளை கவனிக்க வந்த நிர்மலா தேஷ்பாண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன் என் பெயரை களங்கப்படுத்த முயற்சிக்கிறார். அவர்மீது நடவடிக்கை குறித்து நான் யோசித்து வருகிறேன்.பாபர் மசூதி வெடிகுண்டுவைத்து தகர்க்கப்பட்டதாக நான் கூறியதாக பத்திரிக்கை ஒன்றுக்குபேட்டியளித்திருக்கிறார்.
நான் அவ்வாறு கூறவில்லை என்று மறுப்பு கூறினேன். அதை என் மேல் குற்றம் கூறியபத்திரிக்கை தவிர மற்ற எல்லா பத்திரிக்கைகளும் வெளியிட்டன.
என் மறுப்பு பத்திரிக்கைகளில் வெளிவந்த பின்பு லிபர்ஹான் கமிஷன் முன் சுதர்சன்வாக்குமூலம் அளிக்கும் போது நான் நிர்மலா தேஷ்பாண்டே கூறியதைத்தான்சொல்லியிருக்கிறேன். நானாக எதையும் கூறவில்லை என கூறினார்.
என் மேல் சுதர்சன் கூறிய குற்றச்சாட்டை வெளியிட்ட பயனிர் பத்திரிக்கை என்மறுப்பை வெளியிடவில்லை. இதை நான் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின்கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படுவதை தவிர்க்கத்தான் நானும் தொண்டர்களும்சென்றோம். ஆனால் எங்கள் முயற்சி வெற்றி பெறவில்லை என அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications