பிப். 7-ல் பழனி தைப்பூச விழா
பழநி:
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், தைப்பூச திருவிழா பிப்ரவரி மாதம் 7-ம்தேதி கொண்டாடப்படுகிறது.
முருகன் கோவில்களில் விசேடமாக கொண்டாடப்படுவது தைப் பூசம் விழாவும்,பங்குனி உத்திர திருவிழாவுமாகும். பங்குனி உத்திரத்தின் போது பக்தர்கள் காவடிஎடுத்து வருவார்கள். தைப் பூசத்தின் போது பழநிக்கு பக்தர்கள் கால் நடையாகவருவது வழக்கம்,
தைப் பூசம் அடுத்த மாதம் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கொடியேற்றம்அடுத்த மாதம் 1-ம் தேதி நடக்கிறது. இருந்தாலும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள்அதிகமாகிக் கொண்டே வருகிறது.
மார்கழி மாதம் ஆரம்பம் முதலே பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கிவிட்டனர். அடுத்த மாதம் 1-ம் தேதி கொடியேற்றம் நடைபெறும். 10 நாட்கள் தைப் பூசதிருவிழா நடைபெறும். 6-ம் நாள் வள்ளி தெய்வானை திருமணக் காட்சி நடைபெறும்.இரவு 9 மணிக்குப்பின் வெள்ளி ரதத்தில் முருகப்பெருமானின் புறப்பாடு நடைபெறும்.
7-ம் தேதி தைப்பூச தினத்தன்று தேர் திருவிழா நடைபெறும்.












Click it and Unblock the Notifications