For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

2000 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக் கூடிய அக்னி-2 நடுத்தர வகை ஏவுகணையை இந்தியா புதன்கிழமைவெற்றிகரமாக ஏவு சோதனை செய்தது.

ஒரிசா மாநிலம் சந்திப்பூரிலுள்ள வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், விமானப்படைத் தளபதி ஏ.ஒய்.டிப்னிஸ், பாதுகாப்புத் துறை மற்றும் அறிவியல் ஆய்வுக்கழகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அக்னி-2 ஏவுகணை இரண்டாவது முறையாக ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. கார்கில் சண்டை நடந்துகொண்டிருந்தபோது, 1999ம் ஆண்டு ஏப்ரல்- மே மாத வாக்கில் முதல் பரிசோதனை நடந்தது.

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் தயாரிப்பின் முன்னோடியாக அக்னி-2 ஏவுகணை கருதப்படுகிறது.அக்னி-1 ஏவுகணை, நமது ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் சாதனையாகக் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அக்னி ஏவுகணையின் தந்தை என வர்ணிக்கப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அக்னி ஏவுகணைகள் குறித்துக் கூறுகையில், அக்னி ஏவுகணைகளைத்தொடர்ச்சியாக தயாரிக்கும் திறனை இந்தியா இப்போது பெற்றுள்ளது என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X