For Daily Alerts
Just In
ரூ. 28 லட்சம் மோசடி .. தந்தை, மகன் கைது
கோவை:
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாக தந்தை மற்றும்மகனைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை சுங்கத்தைச் சேர்ந்தவர் சிவன் (65). இவரது மூத்த மகன் செல்வம் (30) நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில்இருக்கிறார்.
இந்நிலையில் இந்தப் பகுதியைச் சேர்ந்த செபஸ்டியன் என்பவர் அளித்த புகாரின்பேரில் ரூ. 28 லட்சம் வரை மோசடி செய்ததாக சிவன் மற்றும் அவரது மற்றொரு மகன்தேவராஜ் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், இவர்கள் இந்தப் பணத்தை எவ்வாறு செலவிட்டுள்ளனர் என்பதுகுறித்து கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, January 17, 2001, 5:30 [IST]