மொழி வளர்ச்சி தடைபடக் கூடாது .. கருணாநிதி
சென்னை:
மொழி வளர்ச்சி தடைபடக் கூடாது என்பதற்காகவே குறள் பீட விருதுஅமைக்கப்பட்டது என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் இலக்கிய சங்கப்பலகை அமைப்பின் சார்பில்,குறள் பீட விருது வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி இந்த கருத்தைதெரிவித்திருக்கிறார்.
விழாவில் முதல்வர் மேலும் பேசியதாவது:
இந்த விருதுகளை வழங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்குபெருமையாக உள்ளது.
தமிழ் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ் என அனைத்து கட்சிக்கும் சொந்மானது அல்ல.தமிழ், அனைத்து கட்சியினருக்கும் சொந்தமானது என்று சொல்லும் நிலைவரவேண்டும்.
மத்திய அரசு சாகித்ய அகாடமி விருது அளிக்கிறது. கேரள, கர்நாடக, ஆந்திரஅரசுகளும் இதே போல் விருது வழங்குகின்றன. தமிழக அரசும் விருது வழங்குகிறது.
மொழிக்காக பாடுபட்டவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது, மொழி வளர்ச்சி தடைபடக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டதுதான் தமிழ் இலக்கிய சங்கப்பலகை அமைப்பு.இது போட்டிஅமைப்பு அல்ல.
மிக குறுகிய காலத்தில் இந்த அமைப்பின் மூலம் 16 நூல்கள்மொழிபெயர்கக்ப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயம் . இந்த விழாவில் சமூகசேவகி மதுரை சின்னப்பிள்ளையை பாராட்டியதும் எனக்கு பெருமையளிக்கிறது எனகூறினார்.












Click it and Unblock the Notifications