மலர்க் கண்காட்சிக்குத் தயாராகிறது ஊட்டி
ஊட்டி:
ஊட்டி, 105-வது மலர்க் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. மலர் விதைகள் தெளிக்கும்பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஊட்டியில் கடந்த ஆண்டு 104-வது மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.சிறுதேயிலை விவசாயிகள் தங்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால்போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நேர்ந்து விடாதபடி இருக்கவும், விவசாயிகள்போராட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும் இந்தகண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
தற்போது விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலை விலை கிலோ ஒன்றிற்கு ரூ. 10கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியை நடத்த இயலும்என சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மலர்த் தோட்டத் தொழிலாளர்களும்எதிர்பார்க்கின்றனர்.
தற்போது மலர்க் கண்காட்சிக்காக விதை தூவும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.ரோஜாத் தோட்டத்தில் புதிய நாற்றுக்களை பதியும் பணியும் துவங்கியுள்ளது.
டாலியா, பென்ஸ்டாமோன், ஆஸ்டர், டெலீசீனியம், ஸ்வீட் வில்லியம் ஆகியமலர்களுக்கான விதை தூவும் பணி நடந்து வருகிறது. புகழ் பெற்ற தாவரவியல்பூங்காவில் புல் தரையை தயார்படுத்தும் பணியும் விரைவில் துவங்க உள்ளது.












Click it and Unblock the Notifications