சீன தலைவர் லீ பெங்கை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார் பெங்களூர் மேயர்
பெங்களூர்:
பெங்களூர் மேயர் பிரேமா கரியப்பா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளலீ பெங்கின் பிரிவு உபசார விழாவிற்கு தாமதமாக வந்து தர்மசங்கடத்தைஏற்படுத்தினார்.
சீனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தேசிய மக்கள் காங்கிரசை சேர்ந்த லீ பெங்இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பெங்களூர் சுற்றுபயணத்தைமுடித்துக் கொண்டு ஹைதராபாத் செல்ல விமான நிலையத்தில் தயாராக இருந்தார்.
அப்போது அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவதற்காக பெங்களூர் மேயர்தாமதமாக வந்தார். அவர் தனது கான்டசா காரில் மேயருக்கான பாரம்பரிய உடைஅணிந்து பூச்செண்டுடன் விமான நிலையத்திற்கு வந்த போது லீ பெங் கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா மற்றும் பல அதிகாரிகளுக்கும் கை குலுக்கி விடை பெற்று தன்மனைவியுடன் விமானத்திற்கு சென்று அங்கிருந்து விமான நிலையத்திற்கு வந்திருந்தசீன மக்களுக்கு கை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தார்.
தாமதமாக வந்த மேயர் பிரேமா கரியப்பா, சீன தலைவருக்கு மாலை அணிவித்துபூச்செண்டு கொடுப்பதற்காக விமானத்தை நோக்கி வேகமாக சென்றார்.
விமான நிலைய உயர் அதிகாரிகள் பாது அதிகாரிகளிடம் கூறி மேயர் சீன தலைவருக்குபூச் செண்டு கொடுத்து அவரது மனைவிக்கு மாலை அணிவிக்கவும் வைத்தனர்.
அதன் பின் சீன தலைவர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
யு.என்.ஐ.