சீனப் புத்தாண்டு ஸ்பெஷல் .. 80 கிலோ அனகொண்டா
சிங்கப்பூர்:
வரவிருக்கும் சீனப்புத்தாண்டை வரவேற்பதற்காக தென் அமெரிக்காவில் உள்ள கயானா தீவிலிருந்து 80 கிலோ எடையுள்ள அனகொண்டா பெண்பாம்பும், உலகத்திலேயே மிகவும் பெரிதான இரண்டு பெண் பாம்புகளும் சிங்கப்பூர் வனவிலங்குப் பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிங்கப்பூர் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கையில், சீனப் புத்தாண்டு நெருங்கி வருகிறது. இதையொட்டி, புத்தாண்டு ஸ்பெஷலாக, தென்அமெரிக்காவிலிருந்து அனகொண்டா பாம்பும், மேலும் இரண்டு பெரிய பாம்புகளையும் இங்குள்ள வனவிலங்குப் பூங்காவிற்குக் கொண்டு வந்துள்ளோம்.16 வயதான இந்த மூன்று பாம்புகளையும் 5 பேர் சேர்ந்து தூக்கி வந்தார்கள். என்றனர்.
விலங்கியல் பூங்கா துணைக் காப்பாளர் பிரான்சிஸ் லிம் கூறுகையில், உருவத்தை வைத்து அனகொண்டா பாம்புகளை எடை போடக் கூடாது. சினிமாவில்காட்டுவது போல, மனிதர்களையெல்லாம் அனகொண்டா பாம்புகள் சாப்பிடாது.ஒவ்வொரு அனகொண்டா பாம்பும் மாதத்திற்கு நான்கு கோழிகளைமட்டுமே உண்ணும்.
எதையும் சாப்பிடாமல், தங்கள் உடம்பில் உள்ள கொழுப்பு சத்து மூலம் மட்டும் ஒரு வருடம் வரை வாழும் ஆற்றல் பெற்றவை அனகொண்டாபாம்புகள். நாம் அவற்றை சீண்டாதவரை, அவை அமைதியானவையே. ஏதாவது செய்தால்தான் சிக்கல் வரும் என்றார்.
சீனாவில் எருது, புலி, முயல், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, நாய், பன்றி, எலி, பல்லி மற்றும் சேவல் ஆகியவற்றை வைத்தே சீன ராசிகள்அமைந்துள்ளன. இதை அடிப்படையாக வைத்தே சீன ஜோதிடம் இருக்கிறது. இந்த விலங்குகளை ராசியாகக் கொண்ட நபர்களுக்கு, அந்த விலங்குகளின்குணாதிசியங்களே இருக்கும் என்பது சீன நம்பிக்கை. 1000 வருடங்களாக இது பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications