For Daily Alerts
Just In
ரயில் மோதி 47 பசுக்கள் பரிதாப சாவு
மதுரை:
மதுரை அருகே, திருமங்கலம்-கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரயில் மோதி 47 பசுக்கள்உயிரிழந்தன.
வியாழக்கிழமை மாலை இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. மாடுகளை மேய்ப்பவர்கள் அந்தப் பகுதியில் மாடுகளைமேய்த்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக, விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.
இந்த விபத்தையடுத்து, சென்னை-தூத்துக்குடி முத்து நகர் எக்ஸ்பிரஸ், சென்னை-கன்னியாக்குமரி இடையிலானஎக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட தென் தமிழ்நாட்டுக்குச் செல்லும் பல ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டன.
இறந்த மாடுகளின் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ரயில் போக்குவர்தது துவங்கியது.
யு.என்.ஐ.
Story first published: Thursday, January 18, 2001, 5:30 [IST]