இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை
இதோ தூண்கள் ரெடி ... யார் என்ன சொன்னால் எங்களுக்கு என்ன? நாங்கள் சொன்ன இடத்தில் கோயில் கட்டியேதீருவோம். இதில் குறுக்கிட நீதிமன்றத்திற்கு என்ன உரிமை இருக்கிறது.? பா.ஜ.க. அரசு கவிழ்ந்தால் கவிழட்டுமே?கோயில் கட்டுமானப் பணி இன்ன தேதியில் தொடங்கும். கட்டியே தீருவோம் என்றெல்லாம் வி.எச் பி., பஜ்ரங் தள்போன்ற அமைப்புகளின் தலைவர்கள் சவால் மழை பொழிந்து கொண்டே இருக்கிறார்கள்.
இதன் காரணமாக எழக்கூடிய துவேஷ வெள்ளத்தில், நாட்டின் அமைதி அடித்துக் கொண்டு போய் விடுமே என்றகவலை யாருக்குமே எழக் காணோம். இவர்களிடம் பேசி, நீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரையிலாவது அயோத்திபற்றி எதுவும் கூறுவதில்லை என்ற கருத்தை உருவாக்க, பாரதிய ஜனதா முயற்சி செய்யலாமே!
காஷ்மீர் தீவிரவாதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடியும்: ஹிந்துக்களின் பிரதிநிதிகளும்,முஸ்லிம்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசி அயோத்தி பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
ஆனால் பா.ஜ.க.,வினால் இந்த ஹிந்து அமைப்புகளிடம் பேசி, அயோத்தி சவால்களை நீதிமன்றத் தீர்ப்புவரும்வரை தள்ளிப்போட முடியாதா? அது அல்லவா இப்போது உடனடியாக நடக்க வேண்டிய பேச்சு வார்த்தை!
சவால்கள் குவிந்து கொண்டே போனால், எதிர் தரப்பிலிருந்து பதில் சவால்களும் வளரும். இந்த ஒரு கட்டத்தில்,இரு தரப்பினருக்கும் கவுரவப் பிரச்னையாகி விடும்.
அதற்குப் பிறகு கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், அது கோழைத்தனமான பின் வாங்குதல் ஆகி விடும் என்றுநினைத்து, இரு தரப்பினரும் வறட்டுத் தனத்தை வளர்த்துக் கொள்வார்கள். பிடிவாதங்கள், மூர்க்கத்தனங்களாகமாறிவிடும். ஆகையால் இப்போதே இந்த அயோத்தி சவால்களைத் தவிர்ப்பது நல்லது.
பா.ஜ.க. தலைமை - தேவைப்பட்டால் ஆர்.எஸ்.எஸ்,.ஸின் உதவியோடு - அயோத்தி விவகாரத்தில் முனைந்துள்ளஹிந்து அமைப்புகளிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
அந்தப் பேச்சு வார்த்தை மூலம், கோயில் கட்டுகிற பணி துவங்குகிற தேதி அறிவிப்புகளுக்கு ஒரு நிறுத்தத்தைப்பெற வேண்டும்; தவிர, தூண்கள், மாடங்கள், விக்ரஹங்கள் போன்றவை கொண்டு வந்து குவிக்கப்படுவதைத்தடுக்கவும், அந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் வழி காண வேண்டும்; நீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரையில்,அயோத்தி பிரச்னை மேலும் உக்கிரமடைந்து விடாமல், அந்தப் பேச்சு வார்த்தைகளின் மூலம் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இப்படிச் செய்தால் நாட்டின் அமைதி குலையாமல் காப்பாற்றப்படும்: : பெரும் குழப்பம் விளைந்து விடாமல்தடுக்கப்படும்; மத்திய அரசுக்கு இருந்து வரும் ஒரு பெரும் தொல்லை தீரூம். இந்த முக்கோண நன்மையைஉடனடியாக காண, பா.ஜ.க. தலைமை முனைய வேண்டும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications