6 பேருக்கு ரூ. 1.5 லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவு
சென்னை:
போலீஸ் சப் இன்ஸ்பெக்டரால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட 6 பேருக்கு தலா ரூ. 25,000 நஷ்ட ஈடு தர வேண்டும்என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எட்வர்ட் மற்றும் செல்லப்பன். இவர்களுக்கிடையே, சில காலமாகநிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து இருவரும் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கில் எட்வர்டுக்குச்சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து 1997-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி தனது நிலத்திற்குட்பட்ட பகுதியில் எட்வர்ட் மற்றும் அவரதுநண்பர்கள் வேலி அமைத்தனர். இதை எதிர்த்து செல்லப்பன் தரப்பினர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதனால்களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் செளந்தரபாண்டியன், எட்வர்ட் தரப்பினர் மீது முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்.) பதிவு செய்தார்.
இருப்பினும், எட்வர்ட் தரப்பினருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. சப் இன்ஸ்பெக்டர் முன்பு அவர்கள் தினசரிஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஜூலை 9-ம் தேதி போலீஸ் நிலையத்திற்கு வந்த எட்வர்ட்தரப்பினரிடம் சப் இன்ஸ்பெக்டர் ஆத்திரப்பட்டுள்ளார். தன்னிடம் சொல்லாமல் கோர்ட்டுக்குப் போனதாக அவர்கூறியுள்ளார். அவர்களைத் தாக்கவும் செய்துள்ளார். இதில் ராபின்சன் என்பவர் இறந்து விட்டார்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் 6 பேரும் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம், ஆறுபேருக்கும் இழப்பீடு தர உத்தரவிட்டார். மேலும், சப் இன்ஸ்பெக்டர் செளந்தரபாண்டியனுக்கு எதிராக துறைரீதியிலான விசாரணை நடத்தவும் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பில், சப் இன்ஸ்பெக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்ற மாவட்ட வருவாய் அதிகாரிபரிந்துரை செய்துள்ளார். பொய்யான சான்றிதழ்களை சப் இன்ஸ்பெக்டர் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.சட்டத்தை அமல் செய்ய வேண்டிய அதிகாரியே, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, செயல்பட்டதுகண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications