பாண்டி.க்கு உதவிக் கரம் நீட்டுகிறது பிரான்ஸ்
பாண்டிச்சேரி:
சுகாதாரத் துறையில், பாண்டிச்சேரி அரசுக்கு உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக பிரான்ஸ் அரசுஉறுதியளித்துள்ளது.
மாநில நலத்துறை அமைச்சர் வல்சராஜ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், என் தலைமையிலானதூதுக் குழு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, பாண்டிச்சேரியிலுள்ள பிரான்ஸ் தூதர் கிறிஸ்டியன் பாதருடன்பேச்சு நடத்தினோம்.
இந்த சந்திப்பின்போது, சுகாதாரத் துறையில், பாண்டிச்சேரி அரசுடன் இணைந்து செயல்படவும், பாண்டி. அரசுக்குத்தேவையான உதவிகள் செய்யவும் பிரான்ஸ் தயாராக இருப்பதாக பாதர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை தவிர்த்து பிற துறைகளிலும் பிரான்ஸ் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். முதல்கட்டமாக சுகாதாரத்துறையில் பிரான்ஸ் தனது ஒத்துழைப்பை வழங்கும். இதன்படி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒருடாக்டருக்கு பிரான்ஸ் பயிற்சி வழங்கும் என்று வல்சராஜ் கூறியிருந்தார்.
யு.என்..ஐ.












Click it and Unblock the Notifications