For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதுகெலும்பு ஆபரேஷன் .. கோவைக்கு கிடைத்த கெளரவம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

இந்தியாவிலேயே முதல் முறையாக முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் உயர் பயிற்சிஅளிக்க கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுமதிகிடைத்துள்ளது.

கோவையிலுள்ள கங்கா மருத்துவ மனை "சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஃபெல்லோஷிப்என்ற பயிற்சி வகுப்பை துவங்கவுள்ளது. ஆண்டுக்கு ஒருவர் மட்டுமே இதில்சேர்க்கப்பட்டு பயிற்சி பெற முடியும்.

இது குறித்து மருத்துவமனையின் டாக்டர் ராஜசேகரன் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
முதுகெலும்பின் வழியே முக்கிய நரம்புகள் செல்வதால் மிக முக்கியமான பகுதியாகஇது விளங்குகிறது. முதுகெலும்பு அறுவை சிகிச்சையின்போது மிக முக்கியமாகவும்நுட்பமாகவும் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கென நுண் அறுவை சிகிச்சைக் கருவியும் மிகவும் பயன்படுத்த வேண்டும்.இதற்காக ரூ. 2 கோடி செலவில் கருவி நிறுவப்பட்டுள்ளது.

முதுகெலும்பு அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை 90 சதவீதம் வெற்றி, 95 சதவீதம்வெற்றி என்றெல்லாம் கூற முடியாது. 100 சதவீதம் வெற்றி பெற்றால் தான் இந்தஅறுவை சிகிச்சை ழுமையானதாக இருக்கும். ஒரு சதவீதம் குறைவாக இருந்தாலும்,நோயாளிக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, மிகவும் கவனமுடன் மேற்கொள்ள வேண்டிய இந்த அறுவை சிகிச்சைக்குஉயர் பயிற்சி அளிக்க மருத்துவமனைக்கு அனுமதி கிடைத்திருப்பது மிகவும்முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதற்கு முன்பே சர்வதேச ஆர்த்தோபடிக்சொசைட்டி என்ற அமைப்பிடம் பயிற்சி வகுப்பு நடத்தத் தேவையான அனுமதிபெற்றுள்ளோம்.

தற்போது கிடைத்துள்ள இந்த பயிற்சிக்கான அனுமதியில் ஆண்டுக்கு ஒருவர் மட்டுமேபயிற்சி பெற முடியும். அதோடு, இந்தப் பயிற்சி பெற எலும்பு முறிவு மற்றும் அறுவைசிகிச்சையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இங்கு அஜய் ஷெட்டி, சுகவனம் ஆகிய டாக்டர்கள் சிறப்பான மருத்துவ அனுபவமும்,பயிற்சி அளிக்கும் திறனும் பெற்றுள்ளனர். இதற்கு முன் இலங்கை, இந்தோனேஷியா,சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் டாக்டர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X