கைதானவரை விடுவிக்க பொதுமக்கள் மறியல்
மேட்டூர்:
அடிதடித் தகராறில் கைதான இருவரை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் கொளத்தூர்போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
மேட்டூர் கொளத்தூர் அம்பேத்கர் நகரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புஇன்னிசைக் கச்சேரி நடந்தது. இந்தக் கச்சேரியைக் காண பல்வேறுகிராமங்களிலிருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். இதில் வாலிபர்கள் அதிக அளவில்வந்திருந்தனர்.
கச்சேரி நடந்து கொண்டிருந்தபோது கருங்கலூர் கிராமத்தினரிடையே தகராறுஏற்பட்டது. இதையடுத்து கல்வீச்சு சம்பவங்களும் நடந்தது. இந்த கல்வீச்சில்தாளவாடியைச் சேர்ந்த மது என்பவருக்குக் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த மது, கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னுசாமி, முருகன்ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களை விடுவிக்கக் கோரி போலீஸ் ஸ்டேஷனைஅம்பேத்கர் நகரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் போலீஸ் ஸ்டேஷன்முற்றுகையில் ஈடுபட்டனர்.
மேலும், திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் வந்துசமரசத்தில் ஈடுபட்டனர்.