மேட்ச் பிக்ஸிங் ஊழல் .. சோப்ரா விடுவிப்பு
சென்னை:
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கியிருந்த சுழற்பந்துவீச்சாளர் நிகில் சோப்ரா, அந்த வழக்கிலிருந்துவிடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியச் செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்ச் பிக்ஸிங் தொடர்பான புகாரைவிசாரிக்க அமைக்கப்பட்டிருந்த சி.பி.ஐ., தனது அறிக்கையில், சோப்ரா மீதான புகாரில் ஆதாரமில்லை என்றுகூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. அறிக்கை மீதான முடிவுகளை ஆராய, முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் மாதவனை,கிரிக்கெட் வாரியம் நியமித்தது. மாதவன், அசாருதீன் உள்பட பல வீரர்களை விசாரித்தார். சோப்ராவும் இதேபோல விசாரிக்கப்பட்டார்.
சோப்ராவிடம் நேரடியாக விசாரணை நடத்திய பின் அவர் மீதான புகாரில் உண்மையில்லை என்று மாதவன் முடிவுசெய்தார். தனது விசாரணை முடிவை கிரிக்கெட் வாரியத்திடம் சமர்ப்பித்தார். இதையடுத்து அவர், குற்றவாளிகள்பட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.