புதிய நீதிக்கட்சி தலைவர், மூப்பனார் ஆலோசனை
சென்னை:
புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம் த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்து தமிழகத்தில்மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேசினார்.
புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தற்போது மூன்று சிறு கட்சிகளுடன்இணைந்து தமிழக ஜனநாயக கூட்டணி என்ற மூன்றாவது அணியை துவக்கி உள்ளார்.
இவர் த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்து பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன்பேரில் இவரை மூப்பனார் த.மா.கா. தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்சந்தித்து பேசினார்.
மூப்பனாரிடம், தமிழகத்தில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து சண்முகம் பேசினார்என தெரிகிறது. மூப்பனாரை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய சண்முகம் கூறியதாவது:
நான் தமிழக தேசிய கூட்டணிக்கு தலைமை தாங்குமாறு மூப்பனாரை அழைக்க வந்தேன்.இந்த பேச்சு வார்த்தையின் போக்கு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை சந்தித்து பேசிய பின் முப்பனாரை மீண்டும்சந்தித்து பேச உள்ளேன். மேலும் மக்கள் தமிழ் தேச கட்சியின் நிறுவன தலைவர்கண்ணப்பனையும் சந்தித்து பேச உள்ளேன் என கூறினார்.
த.மா.கா. தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் அங்கமவகிக்கிறது. ஆனால் இதுவரை அது தேர்தல் கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.