வேன் விபத்தில் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருமணத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் பலியானார்கள். இவர்களில் ஒருவர் பெண். 8 பேர்காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு, தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகேயுள்ள முருகைப்பட்டி என்ற இடத்தில், அங்கிருந்து வந்த வேனும்,எதிர்புறத்தில் வந்த வேனும் மோதிக்கொண்டன.
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 4 பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். விபத்தில் காயமடைந்த 8பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எப்போதும் வென்றான் போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications