போலி நிதி நிறுவன மோசடி ரூ. 330 கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 40 வழக்குகளில் தொடர்புடைய மோசடி நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ 330 கோடி சொத்துக்களைக் கைப்பற்ற அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.பாலசுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பல நிதி நிறுவனங்கள் உள்ளன. நிதிநிறுவனங்களில் முதலீடு செய்தவர்களை மோசடி செய்ததாக 368 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நிதிநிறுவனங்களில் 9 லட்சத்து 44 ஆயிரம் பேர் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். பல கோடிக்கணக்கில் முதலீடு செய்தவர்களின் பணம் திருப்பிக்கொடுக்கப்படவில்லை.

இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்திய பின்னர் 247 கோடி வரை பணம் திருப்பிக்கொடுக்கப்பட்டது. இன்னும் ஆயிரத்து 344 கோடி வரை பொதுமக்களுக்குப் பணம் திருப்பி வழங்கப்பட வேண்டியுள்ளது.

இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட நிதிநிறுவனங்களில் ஆயிரத்து 380 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 41 ஆயிரத்துவழக்குகளில் சம்பந்தப்பட்ட 330 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்ற அரசு உத்தரவு போட்டு உள்ளது.

வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆயிரத்து 322 பேரில் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 238 பேர் தலைமறைவாக உள்ளனர்.

நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நிதிநிறுவனங்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பணம் திரும்ப கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனுபவ் நிதிநிறுவனத்துக்கு சொந்தமான பண்ணைகளில் மரங்களை திருடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியாத்தத்தில் ஸ்ரீவாரி நிதிநிறுவனத்தில்முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு 40 சதவீத தொகையை கோர்ட்டு உத்தரவுப்படி வேலூர் மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றார்ஐ.ஜி.பாலசுப்ரமணியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+