இன்று கொழும்பு வருகிறார் நார்வே தூதர்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக நார்வே தூதர் எரிக்சோல்ஹெம்ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருகிறார்.
விடுதலைப்புலிகள் கடந்த டிசம்பர் 24 ம் தேதி நள்ளிரவு முதல் சண்டைநிறுத்தம் அறிவித்தனர். ஆனால் இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதையடுத்துயாழ்ப்பாணத்தில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நார்வே தூதர் எரிக்சோல்ஹெம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருகிறார். அவர் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் சமரசம் செய்துபேச்சுவார்த்தை தொடங்க முயற்சி செய்வார்.
புலிகள் வரும் 24 ம் தேதி வரை சண்டைநிறுத்தம் அறிவித்துள்ளனர். தொடர்ந்து ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினால் சண்டைநிறுத்தம்நீடிக்கப்படமாட்டாது என்று விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர். இந்தத் தகவலை எரிக் சோல்ஹெம் இலங்கை அரசிடம் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகள் ஆர்வம் காட்ட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தினால் அதன்மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். அப்படியானால்விடுதலைப்புலிகளுடன் சண்டையை நிறுத்த முடியும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரான ஆண்டன் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவ வீரர்கள் தாக்குதலை நிறுத்தி விட்டுபின்வாங்கிச் சென்றால் தான் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும்.
உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில்தான் நிறுத்தம் அறிவித்தனர். ஆனால் ராணுவ வீரர்களோ தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தாக்குதலைநிறுத்தும் வரை பேச்சுவார்த்தை தொடங்காது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications