முறைகேடாக நடந்த டென்னிஸ் வீரர்களுக்கு அபராதம்
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முறைகேடாக நடந்து கொண்டுவீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதலில் நடக்கும் போட்டி ஆஸ்திரேலிய ஓபன்டென்னிஸ் போட்டி. இது மெல்போர்ன் நகரில் 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த 5 நாள் போட்டிகளில் முறைகேடாக நடந்து கொண்ட 19 வீரர்களுக்கு அபராதம்விதிக்கப்பட்டுள்ளது.போட்டியின் போது கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு கடும்அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
டென்னிஸ் மட்டையை வெறுப்பில், கோபத்தில் தூக்கி எறிவது போன்றவை குற்றமாககருதப்பட்டு வருகிறது. இது போல் செயல்பட்டதற்காக பிரான்சின் வீரர் பேப்ரிஸ்சான்டரோவுக்கு 5 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் வீரர் டேவிட் பிரினோசில் உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கு 2 ஆயிரம்டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே குற்றத்திற்காக சுவிஸ் வீரர்மார்க் ரோசட்டுக்கு 500 டாலர்கள் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications