சிலைகள் உடைப்பு.. விசாரணை கோருகிறது த.மு.மு.க.
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இந்து கோவில்களில் சிலைகள்உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வு துறைவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்ற மாதம் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மற்றும் தாராபுரத்தில் இந்துகோவில்களில் இருக்கும் சாமி சிலைகள் உடைக்கப்பட்டன.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசாரின் சிறப்பு புலனாய்வு துறையின் விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்க கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து தமிழக முஸ்லிம் முன்னேற்க கழக தலைவர் ஜவாஹிரியுல்லாநிருபர்களிடம் கூறியதாவது:
கருணாநிதி அரசு சிறப்பு புலனாய்வு துறை விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் தமிழகமுஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த மாதம் 23-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில்ஈடுபடும்.
பாளையங்கோட்டையில் மசூதி மீது நடந்த தாக்குதல் தொடர்பாக சிறப்பு புலானாய்வுதுறை விசாரணையை வரவேற்கிறோம். இதே போன்ற விசாரணை இந்து கோவில்களின்சாமி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாகவும் நடைபெற வேண்டும். இதை நாங்கள்தேர்தல் பிரச்சாரத்திலும் வலியுறுத்துவோம்.
மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இந்து சாமி கோயில்கள்உடைக்கப்பட்டதற்கும் தொடர்பு இருக்கிறது. இந்த இரு வழக்குகளிலும் போலீசார்அப்பாவி பொது மக்களையே கைது செய்துள்ளனர் என கூறினார்.
யு.என்.ஐ.