60 தொகுதிகள் தேர்வு .. மதிமுக அறிவிப்பு
திருவாரூர்:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 60 தொகுதிகளில் போட்டியிடும் என்று நிதித்துறை இணைஅமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூறினார்.
திருவாரூர் சுற்றுலா விடுதியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நான் நிதித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகின்றன. வரும் வரவு, செலவு திட்டம், இந்தியாவில் வாழும் ஏழை, எளிய,வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் பெண்கள் நலத்திட்டங்களை மேம்படுத்திதயாரிக்கப்பட்டு வருகிறது.
உலகமயமாக்கல் என்ற திட்டத்தின் அடிப்படையில் உள்நாட்டு தொழில்களை லாபகரமாக உற்பத்தி செய்யவும், அயல்நாட்டு பொருள்களை விட நம்நாட்டு பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கவும் திட்டமிடப்படும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் ம.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும். தி.மு.க. ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். இத்தேர்தலில்ம.தி.மு.க வுக்கு சாதகமான 60 தொகுதிகளை தேர்வு செய்துள்ளோம்.
இது எங்கள் கட்சியின் வளர்ச்சி, சக்திக்கு ஏற்ற வகையிலான தேர்வு. இதன் அடிப்படையில் எங்களது பேச்சுவார்த்தை அமையும் என்றார் செஞ்சிராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications