போலியோ தடுப்பு மருந்து முகாமைத் துவக்கி வைத்தார் ஆளுநர்
பாண்டிச்சேரி:
போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும் பணியை கவர்னர் ரஜினிராய் பாண்டிச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைதுவக்கி வைத்தார்.
பாண்டிச்சேரியில் இருக்கும் ராஜ்நிவாசில் இந்த ஆண்டிற்கான கடைசி போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும்பணியை கவர்னர் ரஜினிராய் துவக்கி வைத்தார். இந்த முறை 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குபாண்டிச்சேரியில் போலியோ தடுப்பு மருத்து கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மருத்துவதுறை இயக்குநர் டாக்டர் தம்மாராவ் கூறியதாவது:
1999-2000-ம் ஆண்டு பாண்டிச்சேரியில் போலியோ நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. பாண்டிச்சேரியில்போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக 416 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும் பணியில் அரசை சாராத பல அமைப்பை சேர்ந்த பணியாளர்களும்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் பணியில் பாண்டிச்சேரி சிறந்து விளங்வதற்காக பாண்டிச்சேரிமுதல்வரை பாராட்டி பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். இரண்டு முறை நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டுமருந்து வழங்கும் பணிக்காக ரூ 7 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
பொது மக்களிடம் இந்த திட்டத்திற்கு உள்ள வரவேற்பு காரணமாக போலியோ தடுப்பு மருந்து கொடுக்கஆரம்பித்த 1 மணி நேரத்தில் 50 சதவிகிதம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது எனகூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications