For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாக்டர் பட்டம் பெற்றார் அனீருத் ஜெகன்னாத்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மொரிஷியஸ் பிரதமர் அனுருத் ஜகன்னாத்துக்கு, சென்னைப் பல்கலைக்கழகம் சனிக்கிழமை டாக்டர்பட்டம் வழங்கி கெளரவித்தது.

சென்னைப்பல்கலைக் கழகத்தில் நடந்த எளிய நிகழ்ச்சியில், தமிழக கவர்னரும், சென்னைப் பல்கலைக்கழக வேந்தருமான பாத்திமா பீவி டாக்டர் பட்டத்தைவழங்கினார்.

டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட அனிருத் ஜகன்னாத் கூறுகையில், எனக்கு டாக்டர் பட்டம் அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது.

இது இந்தியாவுக்கும், மொரிஷியசுக்கும் இடையிலுள்ள தோழமை உணர்வை படம்பிடித்துக் காட்டுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்துக்கும்,மொரிஷியசுக்கும் இடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் உள்ளது.

மொரிஷியசில் வாழும் தமிழர்கள், அந்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்கள். சென்னையும், மொரிஷியசும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

முன்னதாக, சென்னையில் உள்ள டைடல் பூங்காவை மொரிஷியஸ் பிரதமர் பார்வையிட்டார். அவருடன் அவரது மனைவி சரோஜினி தேவியும் வந்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X