ஜெயா - சோனியா தூதர் சந்திப்பு
சென்னை:
சோனியா காந்தியின் தூதர் பிரணாப் முகர்ஜி, அ.தி.மு.க.பொதுச்செயலாளர்ஜெயலலிதாவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சென்னையில் சனிக்கிழமை மாலை ஜெயலலிதா வீட்டுக்கு சோனியா காந்தியின்தூதரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி வந்தார்.இருவரும் அ.தி.மு.க. - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தைநடத்தினார்கள். சுமார் 1 மணி நேரம் இருவரும் சந்தித்துப் பேசினார்கள்.
பேச்சுவார்த்தை முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சோனியா காந்தி அனுப்பியதன் பேரில் நான் சென்னை வந்து ஜெயலலிதாவைசந்தித்துப் பேசினேன். நாங்கள் இருவரும் என்ன பேசினோம் என்பது குறித்துஇப்போது எதுவும் கூற முடியாது. பேச்சுவார்த்தையின் விவரங்களை முதலில்சோனியா காந்தியிடம் கூற வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பாக ஜெயலலிதாநடத்திய பேச்சுவார்த்தை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் பிரணாப் முகர்ஜி.
சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவிரும்புகிறது என்பது பற்றி ஜெயலலிதாவிடம் பிரணாப் முகர்ஜி எடுத்துக் கூறியதாகத்தெரிகிறது.
மேலும் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சோனியாகாந்தி தெரிவித்த கருத்துக்களைஜெயலலிதாவிடம் எடுத்துக் கூறியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications