எம்.ஜி.ஆருக்குக் கோவில் கட்டுகிறார் தாமரைக்கனி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் கட்டப் போவதாக அத்தொகுதி எம்.எல்.ஏ.தாமரைக்கனி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவின்போது அவர் பேசுகையில், தமிழர்கள் அனைவரும்எம்.ஜி.ஆர். பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடுகிறார்கள். தமிழத்தைப் பொருத்தவரை திராவிடக் கட்சிகள்உருவாகக் காரணமே எம்.ஜி.ஆர்தான்.
தமிழக மக்களுக்கு எம்.ஜி.ஆர். ஒரு தெய்வம் போன்றவர். எனவே அந்தத் தெய்வத்திற்குக் கோவில் கட்டத்தீர்மானித்துள்ளேன்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்தக் கோவில் அமையும். தற்போது இடத் தேர்வு நடந்து வருகிறது. அது முடிந்தவுடன்கோவில் கட்டும் பணி துவங்கும்.
ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதற்காகஅதிமுக தொண்டர்கள் சபதம் ஏற்று தேர்தல் பணிகளைக் கவனிக்க வேண்டும் என்றார் தாமரைக் கனி.












Click it and Unblock the Notifications