3 தொகுதிகள் எங்கள் கையில் .. அம்பேத்கர் இயக்கம்
ஈரோடு:
எங்கள் இயக்கம் ஆதரிக்கும் கட்சிக்கு 35 லட்சம் ஓட்டு கிடைக்கும். 3 தொகுதிகளில்வெற்றி வாய்ப்பை நாங்கள் தான் நிர்ணயிப்போம் என்கிறார் அம்பேத்கார் மக்கள்இயக்கத் தலைவர் வை.பாலசுந்தரம்.
ஈரோட்டில் பாலசுந்தரம் அளித்த பேட்டி:
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் தற்போதுள்ள நிலவரப்படி அரசியலில் மாற்றம்வரும்.
மதவாதத்திற்கு எதிராக ஓராணியில் அரசியல் கட்சிகள் நிற்க வேண்டும். அம்பேத்கர்மக்கள் இயக்கத்திற்கு 13 மாவட்டங்களில் ஆதரவு உண்டு. இதனால் நாங்கள்ஆதரிக்கும் கட்சிக்கு 35 லட்சம் ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்போம்.அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் மீதமுள்ள 11 தொகுதிகளில் மாநாடு நடத்திமுடிக்கவுள்ளோம்.
வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்வாய்ப்பு எங்களுக்கு உள்ளது. இட ஒதுக்கீட்டுப பிரச்னையில் முதல்வர் எதைஅரசியலாக்க வேண்டாம் எனக் கூறினாரோ, அதையே தற்போதுஅரசியலாக்கியுள்ளார் என்றார் பாலசுந்தரம்.












Click it and Unblock the Notifications