For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடத்திய தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 60 பேர்படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

மிஷ்ரிவாலா அருகே ஜம்மு - அக்னூர் ரோட்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நடத்தியதில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து ஜம்மு -காஷ்மீர் மாநில எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகள் 4 மணி நேரம் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் இவர்கள் இறந்தனர். இதனால் குடியரசுதினத்தன்றும் அவர்களால் ஆபத்து வரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஸ்ரீநகர் - பாரமுல்லா ரோட்டில் உள்ள கெரேரி பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது தீவிரவாதிகள் சக்திவாய்ந்த வெடிமருந்துகள் மூலம்தாக்குதல் நடத்தியதில் 5 பொதுமக்கள், 3 ராணுவ வீரர்கள் இறந்தனர். 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தெற்கு காஷ்மீர் பகுதியில் பல்வாமா டவுன் என்ற இடத்தில் கிரானைடு வெடிகுண்டு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் பல இடங்களில் நடந்த தாக்குதலில் மொத்தம் 20 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X