For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூப்பனார் தலைமையில் 3 வது அணி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

3 வது அணிக்கு மூப்பனார் தலைமை தாங்குவார், அ.தி.மு.க., தி.மு.க.,விற்கு இது மாற்றாக அமையும் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்தார்.

கோவையில் புதிய நீதிக் கட்சியின் தொகுதி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட சண்முகம் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழ்நாட்டில் 3வது அணியாக தமிழ்நாடு ஜனநாயகக் கூட்டணி அமைத்துள்ளோம். இந்த அணிக்கு நான்தலைவராக உள்ளேன். செயலாளராக கொங்குநாடு மக்கள் கட்சியின் தலைவர் தேவராஜன் உள்ளார். 3 வதுஅணிக்கு தலைமை தாங்கும்படி மூப்பனாரை அழைத்துள்ளேன். மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனைசெய்து விட்டு முடிவை அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனஎதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாட்டில் 3 வது அணி அமைந்தால், நாங்கள் அதில் அதிகபட்ச இடங்களில் போட்டியிடுவோம். எங்களுக்குஅடுத்தபடியாகத் தான் த.மா.கா போட்டியிடும்.

இந்த அணியில்சேர பிள்ளைமார் சங்கம், தாயக மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, மக்கள் தமிழ்தேசம்,போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டாலும் கூட 70தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மிக குறுகிய காலத்தில் அபரிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.

எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணியில் இடம் பெற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்குதருவோம். புதிய நீதிக் கட்சியின் தேர்தல் பட்டியல் தயாராக உள்ளது. ஈரோடு தொகுதியில் சுதானந்தன்போட்டியிடுவார் என்றார் சண்முகம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X