For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வி.எச்.பியைத் தடை செய்யுங்கள் .. சுவாமி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை மத்திய அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளைதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிகூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் சுவாமி வெளியிட்ட அறிக்கையில், அரசியல் சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில்,ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், வி.எச்.பி. தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

2002ம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று விஸ்வஇந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது, மக்களை பயமுறுத்துவது போல உள்ளது. மத்திய, மாநில அரசுகளை அதுமதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

வி.எச்.பியின் செயல் பயங்கரவாத செயலுக்கு ஒப்பானது. சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு, அரசியல்சாசனத்தை அர்த்தமில்லாததாக மாற்ற வி.எச்.பி. நினைக்கிறது என்று கூறியிருந்தார் சுவாமி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X