பேச நேரம் கோரி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை:
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, பேசுவதற்கு அதிக நேரம் கொடுக்காததைக் கண்டித்து அ.தி.மு.க, த.மா.காஎம்.எல்.ஏக்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
முதலில் த.மா.கா. உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் தலைமையில் வெளிநடப்புச் செய்தனர். அவையில் கவர்னர் உரை மீதானதீர்மானத்தின் மீது த.மா.கா உறுப்பினர் ஞானசேகரன் 26 நிமிடங்களுக்கும் மேல் பேசினார். இதையடுத்து துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி அவரைஅமரும்படிக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா. எம்.எல்.ஏக்கள் சபையை விட்டு வெளியேறினர்.
முன்னதாக பேசிய த.மா.கா எம்.எல்.ஏ. ஞானசேகரன், வீரப்பனைப் பிடிப்பதற்கு அரசு முயற்சி எடுக்கவில்லை என்றும், தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறனைக் கைது செய்யக் கோரியும் பேசினார். அவர் தனது பேச்சை முடிப்பதற்கு இன்னும் சில நொடிகளே இருந்தன. ஆனால் தொடர்ந்துஅவர் பேச துணை சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து, சட்டசபையில் ஜனநாயகமே இல்லை என்று கூறிக் கொண்டே தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறினார். பின்னர் சிறிது நேரத்தில்அவர்கள் மீண்டும் அவையில் வந்து அமர்ந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.விஸ்வநாதனுக்கு பேசுவதற்கு அதிக நேரம் அளிக்காததையடுத்து, அதிமுக சட்டசபைத் தலைவர் சுந்தரம்தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications