For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாக்குதல் நடத்தத் திட்டம் .. 2 புலிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கைத் தலைநகர் கொழும்பில், விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவுத் தலைவரும், புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த ஒரு புலியும் கைது செய்யப்பட்டனர்.

கொழும்புத் துறைமுகம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீஸார்கூறுகிறார்கள்.

கொழும்பு துறைமுகத்திற்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் அறையில் வைத்து கடற் புலியும்,கடற்கரையோரம் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து மற்றொரு புலியும் கைது செய்யப்பட்டனர்.

இருவரும், விடுதலைப் புலிகளின் சண்டை நிறுத்தம் முடியும் தினமான புதன்கிழமை கொழும்பில் பெரும்தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கொழும்பு நகரில் ஊடுறுவியுள்ள பிறவிடுதலைப் புலிகள் குறித்த தகவலையும் அவர்கள் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினார்கள்.

கொழும்பில் தாக்குதல் நடத்த புலிகள் ஊடுறுவியுள்ளது தெரிய வந்துள்ளதையடுத்து, கொழும்பு முழுவதும்போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X