சட்டசபையில் சிமென்ட் எழுப்பிய சலசலப்பு
சென்னை:
சிமென்ட் விலை உயர்வு குறித்து இந்தியாவின் முன்னணி சிமென்ட் உற்பத்தியாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வர்த்தக முறைப்படுத்தும் கமிஷன்கூறியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், சிமென்ட் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், மத்திய தொழில்துறைஅமைச்சர் முரசொலி மாறன் முன்னணி சிமென்ட் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் விவாதம் நடத்தியிருக்கிறார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.டி.சோமசுந்தரம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சிமென்ட் விலை உயர்வு குறித்துபோராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் சிமென்ட் விலை உயர்வு குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் வீராசாமி பேசுகையில், தமிழகத்தில் மட்டும், சிமென்ட் விலை உயரவில்லை. கேரளா, மகாராஷ்டிராவிலும்சிமென்ட் விலை உயர்ந்துள்ளது.
விலைஉயர்வு குறித்து இந்தியாவின் முன்னணி சிமென்ட் உற்பத்தியாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வர்த்தக முறைப்படுத்தும் கமிஷன் கூறியுள்ளதுஎன்றார்.
யு.என்.ஐ.