பெக்கருடன் பழகிய இந்தியப் பாடகி கர்ப்பம்
முனிச்:
பிரபல டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாப்பாடகி சப்ரினா ஷெட்லர் கர்ப்பம் அடைந்துள்ளார்.
டென்னிஸ் உலகில் பிரபலமானவர்களில் ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்த போரிஸ்பெக்கர். இவர் தற்போது டென்னிஸ் பந்தயங்களில் விளையாடுவதில்லை.
இவர் 7 ஆண்டு கால குடும்ப வாழக்க்ைகு பின் தன் மனைவி பார்பராவை விவாகரத்துசெய்தார். அவருக்கு ஜீவனாம்ச தொகையாக ரு 64 கோடியும் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் ஜெர்மனியில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாப் பாடகிசப்ரினா ஷெட்லர் பெக்கரை காதலித்து வந்தது தெரியவந்தது. தற்போது அவர் பெக்கர்மூலம் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விஷயம் ஜெர்மனி பத்திரிக்கைகளில் விரிவாகவிளக்கப்பட்டுள்து.
இதற்கிடையே, ரஷ்யாவைச் சேர்ந்த லுமிடியா என்ற பெண் தன் கர்ப்பத்துக்கும்பெக்கர்தான் காரணம் என கூறியுள்ளார்.ஆனால் இதை பெக்கர் மறுத்துள்ளார். மேலும்மரபணுச் சோதனை மூலம் அது தன் குழந்தை இல்லை எனவும் நிருபிக்கப் போவதாகபெக்கர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications