காஷ்மீர் சண்டை நிறுத்தம் 1 மாதம் நீட்டிப்பு
டெல்லி:
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் சண்டை நிறுத்தத்தைஇந்த மாதம் 26-ம் தேதிக்கு பின் மேலும் 1 மாத காலம் நீட்டிப்பது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
ரம்ஜான் மாதத்தின்போது, நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரில்சண்டை நிறுத்தம் அறிவித்திருந்தது. இருப்பினும் அதை மதிக்காமல், தீவிரவாதிகள்தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், 26-ம் தேதியுடன் சண்டை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்துசண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து விவாதிக்க மத்திய பாதுகாப்பு விவகாரஅமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை கூடியது.
கூட்டத்திற்கு பிரதமர் வாஜ்பாய் தலைமை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி, பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், தேசியபாதுகாப்புதுறை ஆலோசகர் பிரிஜேஷ் மித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் இறுதியில், மேலும் 1 மாதத்திற்கு சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications