வெடிகுண்டு புரளி ... கல்லூரிக்கு விடுமுறை
திருப்பூர்:
திருப்பூர் மகளிர் கல்லாரிக்கு வந்த வெடிகுண்டு புரளியையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
திருப்பூரில் எஸ்.ஆர்.ஜி மகளிர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் ஒரு மர்மான போன் கால் ஒன்று வந்தது.இந்த போனில் கல்லூரி முதல்வரிடம் மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார்.
அப்போது கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது இன்னும் சில நேரத்தில் வெடிக்கும் எனக் கூறியுள்ளார். அப்போது "வாழ்க தமிழ், வளர்கவிடுதலைப் புலிகள் எனக் கூறி போனைத் துண்டித்து விட்டார். இது குறித்து கல்லூரி முதல்வர் உடனடியாக போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். எனவே,போலீசார் உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.
மெட்டல் டெடக்டர் உட்பட நவீன கருவிகளால் சோதனை இடப்பட்டது. இந்த சோதனையை ஒட்டி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவிகள்அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சோதனையின் இறுதியாக வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இந்த மிரட்டல் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications