பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் .. புலிகளுக்கு அழைப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
சண்டையை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கைமீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அரசுச் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விடுதலைப புலிகள் தாங்களாகவே சண்டைநிறுத்தம் அறிவித்து வருவது தேவையில்லாதது. அதை விடுத்து விட்டு, சர்வதேச சமுதாயத்தின் கோரிக்கையைஏற்று பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என்றார்.
முன்னதாக, தாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த சண்டை நிறுத்தம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாகபுலிகள் அறிவித்துள்ளனர். இந்த சண்டை நிறுத்தம் புதன்கிழமை முடிவதாக இருந்தது.
ஆனால், புலிகளின் சண்டை நிறுத்தம் குறித்து கவலைப்படவில்லை என்று ராணுவத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications