ஒழுக்கம் இருப்பவர்களுக்கே அரசு பதவி .. வீரமணி
கோவை:
ஒழுக்கமும் நேர்மையும் உடையவர்கள் தான் அரசு உயர்பதவியில் இருக்க வேண்டும் என திராவிடர் கழகச்செயலர் கி. வீரமணி விருப்பம் தெரிவித்துள்ளார்.
உடுமலைப் பேட்டையில் உள்ள குட்டைத் திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கி. வீரமணிபேசியதாவது:
சாதி, சமய வேற்றுமைக்கு இடம் அளிக்காமல், ஒழுக்கம் நேர்மை, கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்கள் தான்அரசு பதவிகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்திற்கு நன்மை ஏற்படும்.
இல்லையெனில், சமுதாயம் பாழ்பட்டுப் போகும். தேர்தல் நேரத்தில் மழைக்காலத்தில் காளான்கள் போல பலகட்சிகள் முளைத்து வருகின்றன. இவை எல்லாம் தேர்தல் முடிந்த பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
ஜாதி மதக் கலவரங்களால், நாடு சீரழிந்து வருகிறது. சமுதாயத்தில் அமைதியின்மை ஏற்பட்டு வருகிறது. ஜாதியற்றசமுதாயத்தை உருவாக்கிடவும், லஞ்ச ஊழல்களைத் தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளபொதுமக்களிடையே விழிப்புணர்வு தேவை.
ஜாதி, மதச் சண்டைகளை விடுத்து அவரவர் பணியை செய்து வந்தால் விரைவான முன்னேற்றம் நாட்டில் ஏற்படும்என்பதில் ஐயமில்லை என்றார் வீரமணி.