முஸ்லீம் ஓட்டுக்களைக் குறி வைக்கிறார் ஜெ.
திருச்சி:
திருச்சியில் நடக்கவுள்ள தேசிய லீக் கட்சியின் மாநில மாநாட்டின்போது தனது தேர்தல்பிரசாரத்தைத் துவக்கத் திட்டமிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள்முதல்வருமான ஜெயலலிதா.
இந்த மாதம் 29-ம் தேதி திருச்சியில் நடக்கும் தேசிய லீக் கட்சியின் மாநில மாநாட்டில்கலந்து கொண்டு அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்க ஜெயலலிதாமுடிவெடுத்துள்ளார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் 29-ம் தேதிதிருச்சியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானமுஸ்லிம்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம்சிறுபான்மையினர் ஓட்டுகளை கணிசமாக பெற முடியும் என ஜெயலலிதா நம்புகிறார்.
இந்த மாநாட்டில் அ.தி.மு.க.வும். தனது பலத்தை நிரூபிக்க விரும்புகிறது. இதற்காகஅதிகமான அ.தி.மு.க. தொண்டர்களை மாநாட்டிற்கு திரட்டும்படி மாவட்ட கட்சிநிர்வாகிகளுக்கும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த பணிகளை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஓ.எஸ் மணி செய்துவருகிறார். இந்த மாநாட்டில் ஜெயலலிதா கலந்து கொள்ள இருப்பதால் கோஷ்டிபூசல்களை மறந்து அனைத்து அ.தி.மு.க.வினரும் ஒன்றுபட்டு செயல்பட்டுவருகின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்று எப்படியும் மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என உறுதிபூண்டிருக்கும் ஜெயலலிதா சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் தனக்கு பெரும்உதவியாக இருக்கும் என நம்புகிறார்.
இந்திய தேசியலீக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் சிறு பான்மைமக்களை கவர முடியும். அவர்கள் வாக்குகளை பெற முடியும் என்ற எண்ணத்தில் இந்தமாநாட்டில் கலந்து கொள்ள ஜெயலலிதா முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் த.மா.கா. தலைவர் மூப்பனார் உள்ளிட்ட மத சார்பற்ற கூட்டணி கட்சிதலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஜெயலலிதாவை வரவேற்ற பிரம்மாண்டமான கட்அவுட்களும் வைக்க ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications