தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது தடியடி
மதுரை:
மதுரையில் செவ்வாய்க்கிழமை, கடன் வசதி தரக் கோரி ஊர்வலம் நடத்திய எஸ்.சி., எஸ்.டி.மாணவர்கள், அனுமதி வழங்கப்படாத பாதை வழியாக செல்லமுற்பட்ட போது போலீஸார் அவர்கள் மேல் தடியடி நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மதுரை ரயில்வே நிலையத்திலிருந்து 350 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் வரைஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் தங்களுக்கு நீண்டகாலமாக அனுமதி வழங்காமலிருக்கும் கடன் வசதியை விரைவில் செய்து கோரி ஊர்வலம்நடத்தினார்கள்.
அப்போது ஊர்வலம் செல்ல வேண்டிய பாதையிலிருந்து பல மாணவர்கள் வேறு இடங்கள் வழியாகச் சென்றார்கள். மாணவர்கள்ை போலீஸார் தடுத்தநிறுத்த முயன்றும் அவர்கள் போலீஸாரை மீறி அதே வழியாகச் சென்றனர்.
இதையடுத்து அவர்களைக் கலைப்பதற்காக போலீஸார் அவர்கள் மேல் தடியடி நடத்தினார்கள். இவர்களில் 125 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றனர்.
யு.என்.ஐ.