மர்ம ஹெலிகாப்டர் .. பீதியில் பாண்டி.
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கடல் பகுதியில் மர்மமான முறையில் சுற்றி வந்த ஹெலிகாப்டர் பார்சல்ஒன்றை கடலுக்குள் போட்டது. இதையடுத்து பாண்டிச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாண்டிச்சேரி அருகே இருக்கும் நரம்பை மீனவர் கிராமத்திற்கும், மூர்த்திக்குப்பம்மீனவர் கிராமத்திற்கும் இடையே இருக்கும் கடல்பகுதியில் சென்ற 18-ம் தேதி சாம்பல்நிற ஹெலிகாப்டர் ஒன்று மர்மமான முறையில் பறந்தது. அந்த ஹெலிகாப்டரிலிருந்துபார்சல் ஒன்றும் கடலில் போடப்பட்டது.
ஹெலிகாப்டரிலிருந்து நூலேணி வழியாக திடாகத்திரமான நபர் ஒருவரும் கடலில்இறங்கினார். பின் அந்த ஹெலிகாப்டர் பறந்து சென்றுவிட்டது.
அந்த நபர் அரை மணி நேரம் கடலில் நீந்திக் கொண்டிருந்தார். அதன் பின் அந்தஹெலிகாப்டர் மீண்டும் வந்து அவரை ஏற்றிக்கொண்டு சென்றது. இதைப் பார்த்துஅந்த பகுதியில் வாழும் மக்கள் பயமடைந்தனர்.
மீனவர் குப்பத்தைச் சேரந்த சிலர் கடலுக்குள் நீந்திச் சென்று கடலில் போடப்பட்டபார்சல் என்ன என்று பார்க்கச் சென்றனர். அந்த பார்சல் வெடி குண்டு போல்தெரிந்ததால் அவர்கள் பயந்து போய் அதை எடுக்காமல் திரும்பி வந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications