விடுதலைப்புலிகள் ஊடுறுவல் .. எச்சரிக்கிறது அதிமுக
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் விடுதலைப்புலிகள் ஊடுறுவ முயல்கிறார்கள் என பாண்டிச்சேரிஅ.தி.மு.க. தலைவர் டி.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜனவரி மாதம் 18-ம் தேதி பானித்திட்டு பகுதி கடற்பகுதியில் மர்மமான முறையில்ஒரு நபர், ஹெலிகாப்டர் மூலம் கடலில் இறக்கி விடப்பட்டார், பின் 30 நிமிடங்கள்கழித்து அவர் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.
இது விடுதலைப் புலிகளின் செயலாகத்தான் இருக்கும். விடுதலைப் புலிகள்,நாட்டிற்குள் ஊடுறுவ முயற்சிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
தமிழக கடலோர காவற் படையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணைநடத்தியுள்ளனர். அதன் பின்பும் பாண்டிச்சேரி அரசு எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.
காலப்பேடடைக்கு அருகே ஒரு போலீஸ்காரர் சுடப்பட்டிருக்கிறார். அது அதிகாரவர்க்கத்தினரால் மறைக்கப்பட்டு விட்டது. அந்த சம்பவத்தில் போலீஸ்காரருக்கு காயம்ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் கால் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது எனகூறி வருகின்றனர்.
சமீபத்தில் கடலோர காவற் படையினரால் நடத்தப்பட்ட சோதனையின் போதுகைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.உளவாளின் நடமாட்டம் இருப்பதையும் குறிக்கிறது என கூறினார்.
யு.என்.ஐ.